டாக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ பரவல்

பங்களாதேஷ் தலைநகரில் அடுக்குமாடி கட்டடத்தில் தீ பரவல்: 7 பேர் பலி

by Bella Dalima 28-03-2019 | 7:22 PM
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் அடுக்குமாடி கட்டடமொன்றில் தீ பரவியதில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். டாக்காவில் உள்ள பனானி எனும் பகுதியில் 22 தட்டுகளைக் கொண்ட அடுக்குமாடி கட்டடத்தில் இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த தீ விபத்தில் இருந்து தப்பிக்க முயன்ற சிலர் மாடிகளில் இருந்து கீழே குதித்துள்ளனர். இதன்போது படுகாயம் அடைந்த 5 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணியில் இராணுவ ஹெலிகொப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டு 35 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். கடந்த மாதத்தில் டாக்காவில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 78 பேர் வரையில் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.