ஆப்கானுடன் கைதிகளைப் பரிமாறுவது தொடர்பில் கவனம்

இலங்கை - ஆப்கானிஸ்தான் இடையில் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் குறித்து கவனம்

by Staff Writer 28-03-2019 | 3:39 PM
Colombo (News 1st) இலங்கைக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் கைதிகளை பரிமாற்றுவதற்கான உடன்படிக்கையை கைச்சாத்திடுவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள மற்றும் இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் தூதுவர் அஷ்ரஃப் ஹைதாயிக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது இந்த விடயம் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான் கைதிகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இதன்போது ஆப்கானிஸ்தான் தூதுவர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையில் கைதிகளை பரிமாறிக்கொள்வதற்கான உடன்படிக்கையை கைச்சாத்திடுவது தொடர்பிலான அடிப்படை விடயங்கள் ​குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.