விஷ்வ துளசி வித்தியாலய கட்டடங்கள் விடுவிப்பு

இராணுவத்திடமிருந்த திருக்கோவில் விஷ்வ துளசி வித்தியாலய மைதானமும் கட்டடங்களும் விடுவிப்பு

by Staff Writer 28-03-2019 | 6:53 PM
Colombo (News 1st) இராணுவம் வசமிருந்த அம்பாறை - திருக்கோவில் விஷ்வ துளசி வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானமும் கட்டடங்களும் விடுவிக்கப்பட்டுள்ளன. திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட விஷ்வ துளசி வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானமும் மூன்று கட்டடங்களும் கடந்த 25 ஆம் திகதி வலயக் கல்விப் பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து குறித்த பகுதி இராணுவம் வசமிருந்து வந்தது. காணி விடுவிக்கப்பட்டதை அடுத்து, பாடசாலை சமூகத்தினர் இன்றைய தினம் விடுவிக்கப்பட்ட மைதானம் மற்றும் கட்டடங்களை பார்வையிட்டதுடன், சிரமதானப்பணிகளிலும் ஈடுபட்டனர்.