அருவக்காடு குப்பை பிரச்சினை: வண்ணாத்திவில்லு பிரதேச சபையில் கொண்டுவரப்பட்ட பிரேரணை நிறைவேற்றம்

by Staff Writer 28-03-2019 | 7:06 PM
Colombo (News 1st) அருவக்காட்டில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வண்ணாத்திவில்லு பிரதேச சபையில் கொண்டுவரப்பட்ட பிரேரணை நிறைவேற்றப்பட்டது. வண்ணாத்திவில்லு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று இடம்பெற்றது. பொதுஜன பெரமுனவும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து வண்ணாத்திவில்லு பிரதேச சபையில் ஆட்சியமைத்துள்ளன. 18 உறுப்பினர்களைக் கொண்ட வண்ணாத்திவில்லு பிரதேச சபையின் இன்றைய அமர்விற்கு அனைத்து உறுப்பினர்கள் சமூகமளித்திருந்தனர். அருவக்காட்டில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினர் ஏ.எம். அனாஸ்தீனால் பிரேரணை கொண்டுவரப்பட்டது. இந்த பிரேரணை 14 வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டதாகவும், ஏனைய நான்கு உறுப்பினர்கள் நடுநிலை வகித்ததாகவும் நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

ஏனைய செய்திகள்