பஸ் மற்றும் ரயில் பெட்டிகளை கொள்வனவு செய்ய அனுமதி

பஸ் மற்றும் ரயில் பெட்டிகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி

by Staff Writer 27-03-2019 | 10:22 AM
Colombo (News 1st) இலங்கை போக்குவரத்து சபைக்கு 37 பேருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கு, அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் அர்ஜுன ரணதுங்க இதற்கான பத்திரத்தை அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார். இதேவேளை, மலையகத்திற்கான சேவையில் ஈடுபடும் ரயில்களுக்கான 50 அடி நீளமுடைய 75 பயணிகள் பெட்டிகளையும் 20 சரக்கு பெட்டிகளையும் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்தோனேஷியாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வங்கியின் நிதிப்பங்களிப்பு மூலம் இந்த கொள்வனவுகள் இடம்பெறவுள்ளன.