குருணாகல் - சுந்தராபொல குப்பைமேட்டில் தீ

குருணாகல் - சுந்தராபொல குப்பைமேட்டில் தீ

by Staff Writer 27-03-2019 | 7:12 AM
Colombo (News 1st) குருணாகல் - சுந்தராபொல குப்பைமேட்டில் தீ பரவியுள்ளது. குருணாகல் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். குறித்த குப்பைமேட்டில் இருந்து 500 மீற்றர் பரப்பில் வசிக்கும் கர்ப்பிணித் தாய்மார்கள், குழந்தைகள் மற்றும் வயோதிபர்கள் வௌியேற்றப்பட்டுள்ளதுடன் இந்த நிலைமைக்கு குருணாகல் மாநகர சபையே பொறுப்புக்கூற வேண்டும் என பிரதேச மக்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர். இந்த விடயம் தொடர்பில் நாம் குருணாகல் மாநகர சபை மேயர் துஷார சஞ்சீவவிடம் வினவியபோது, குப்பைமேட்டில் ஏற்பட்ட தீப்பரவல் தொடர்பில் உரிய பிரிவுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது தீ 90 வீதம் வரை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.