50 ரூபா மேலதிகக் கொடுப்பனவு வழங்க அமைச்சரவை அனுமதி

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபா மேலதிகக் கொடுப்பனவு வழங்க அமைச்சரவை அனுமதி

by Staff Writer 26-03-2019 | 8:27 PM
Colombo (News 1st) பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 50 ரூபா மேலதிகக் கொடுப்பனவு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக 1.2 பில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்யவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இந்த விடயத்தைக் கூறினார். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கைக்கு அமைய, அரசாங்கத்தினால் இந்த தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

ஏனைய செய்திகள்