உடப்பு பகுதியில் 1232 கிலோ பீடி இலைகள் மீட்பு

புத்தளம் - உடப்பு கடற்பிராந்தியத்தில் 1232 கிலோ பீடி இலைகள் மீட்பு

by Staff Writer 26-03-2019 | 10:48 AM
Colombo (News 1st) புத்தளம் - உடப்பு கடற்பிராந்தியத்தில் 1232.5 கிலோகிராம் பீடி சுற்றும் இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 35 பொதிகளில் பொதியிடப்பட்டு, கடலில் மிதந்த நிலையில் இவை கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவருவதற்காக, இவற்றைக் கடலில் மிதக்கவிடப்பட்டிருக்கலாம் என கடற்படையினர் சந்தேகம் வௌியிட்டுள்ளனர். இவ்வாறு கைப்பற்றப்பட்ட பீடி இலைகளை சின்னப்பாடு சுங்க அலுவலகத்தில் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் மாத்திரம், சுமார் 7000 கிலோகிராம் பீடி சுற்றும் இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, கடற்படை சுட்டிக்காட்டியுள்ளது.