நெடுந்தீவு கடற்பரப்பில் 11 தமிழக மீனவர்கள் கைது

நெடுந்தீவு கடற்பரப்பில் 11 தமிழக மீனவர்கள் கைது

by Staff Writer 26-03-2019 | 6:42 PM
Colombo (News 1st) இலங்கையின் கடல் எல்லைக்குள் மீன்பிடித்த குற்றச்சாட்டில் 11 தமிழக மீனவர்கள் யாழ் - நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (25) இரவு முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவர்களின் 3 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவி பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் தெரிவித்தார். விசாரணைகளின் பின்னர் மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவி பணிப்பாளர் குறிப்பிட்டார். தமிழகத்தின் இராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த மீனவர்களே நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, கடந்த வாரம் கைது செய்யப்பட்ட நாகப்பட்டிணத்தைச் சேர்ந்த 11 மீனவர்கள் எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.