தொடர்ந்தும் அதிக வெப்பத்துடனான வானிலை

தொடர்ந்தும் அதிக வெப்பத்துடனான வானிலை

by Staff Writer 26-03-2019 | 7:42 AM
Colombo (News 1st) எதிர்வரும் சில நாட்களுக்கு நீர்மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த பகுதியில் மழை பெய்வதற்கான சாத்தியங்கள் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. எதிர்வரும் மே மாதம் வரையில் இந்த நிலைமை நீடிக்கலாம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, வட மேல் மாகாணத்திலும் மன்னார், கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் இன்று அதிக வெப்பத்துடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வெப்பமான வானிலை நிலவும் வேளையில் அவதானமான செயற்படுமாறு திணைக்களம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.