சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சி

திருகோணமலையில் சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்றவர் கைது

by Staff Writer 26-03-2019 | 3:26 PM
Colombo (News 1st) திருகோணமலை - உப்புவௌி பகுதியில் சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முற்பட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 16 வயதான பாடசாலை மாணவியை அப்பகுதியிலுள்ள வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்திற்குட்படுத்த சந்தேகநபர் முயன்றதாக பொலிஸார் தெரிவித்தனர். மஹாமாயபுர பகுதியைச் சேர்ந்த 36 வயதான முச்சக்கரவண்டி சாரதியொருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரை இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவியை காட்டுப்பகுதிக்கு அழைத்துச்சென்று, துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்ற போது, பிரதேச மக்களால் தாக்கப்பட்டுள்ளார். மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நிலாவௌி பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.