தமிழகத்திலிருந்து 7 குடும்பங்கள் நாடு திரும்பின

தமிழக முகாம்களில் வசித்து வந்த 7 குடும்பங்கள் நாடு திரும்பின

by Staff Writer 26-03-2019 | 10:05 PM
Colombo (News 1st) தமிழக முகாம்களில் வசித்து வந்த 7 குடும்பங்களைச் சேர்ந்த இலங்கையர்கள் இன்று நாடு திரும்பினர். அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையாளர் அலுவலகத்தின் ஒத்துழைப்புடன் 7 குடும்பங்களைச் சேர்ந்த 27 பேர் இன்று நாட்டிற்கு அழைத்துவரப்பட்டனர். இவர்களில் 10 பெண்களும் 7 குழந்தைகளும் அடங்குகின்றனர். இவர்களை யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் குடியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு குறிப்பிட்டுள்ளது. சுமார் ஒரு இலட்சம் இலங்கையர்கள் தமிழகத்தில் வசித்து வருகின்றனர். இவர்களில் 65,000 பேர் முகாம்களில் வாழ்ந்து வருவதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு குறிப்பிட்டுள்ளது.