by Staff Writer 26-03-2019 | 1:44 PM
Colombo (News 1st) கொழும்பின் சில பகுதிகளில் இன்று (26ஆம் திகதி) இரவு முதல் 9 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
கொழும்பு 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் இன்று இரவு 9 மணி முதல் நாளை காலை 6 மணி வரை, 9 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்தக் காலப்பகுதிக்குள் கோட்டை, புறக்கோட்டை பகுதிகளில் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோக்கப்படும் எனவும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.
அவசர திருத்தப்பணிகள் காரணமாக இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.