கெசல்வத்த தினுகவின் உதவியாளர் கைது

கெசல்வத்த தினுகவின் உதவியாளர் கைது

by Staff Writer 26-03-2019 | 9:47 AM
Colombo (News 1st) திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் போதைப்பொருள் கடத்தல்காரரான கெசல்வத்த தினுகவின் உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வாழைத்தோட்டம் - டயஸ் பகுதியில் நேற்று (25ஆம் திகதி) மாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 2 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சந்தேகநபர், கடந்த பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி வாழைத்தோட்டம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கொட்டாஞ்சேனையை சேர்ந்த 36 வயதான இந்த சந்தேகநபர் இன்று (26ஆம் திகதி) மாளிகாகந்த நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.