நாளாந்தம் 300 மெகாவோட் மின்சாரத் தட்டுப்பாடு

நாளாந்தம் 300 மெகாவோட் மின்சாரத் தட்டுப்பாடு

by Fazlullah Mubarak 25-03-2019 | 7:49 AM

Colombo (News 1st) நாளாந்தம் 300 மெகாவோட் மின்சாரத்திற்கான தட்டுப்பாடு நிலவுவவதாக, மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

அனைத்து மின்நிலையங்களும் செயற்படுகின்ற போதிலும், வரட்சியுடனான வானிலையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக, சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடு தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டின் மின்சாரத்திற்கான கேள்வி, வருடாந்தம் 150 மெகாவோட்டினால் அதிகரிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.