நெல் கொள்வனவு வெற்றிகரமாக முன்னெடுப்பு

நெல் கொள்வனவு வெற்றிகரமாக முன்னெடுப்பு

by Staff Writer 25-03-2019 | 9:43 PM
Colombo (News 1st) நாடு முழுவதும் நெல் கொள்வனவு வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாக, நெல் கொள்வனவு சபையின் தலைவர் கஸ்தூரி அனுராதநாயக்க தெரிவித்துள்ளார். நெல் கொள்வனவு சபையின் சகல களஞ்சியசாலைகளும் தற்போது திறக்கப்பட்டுள்ளதுடன், களஞ்சியாலை வசதியற்ற பிரதேசங்களை இனங்கண்டு, லொறிகள் மூலம் நெல்லை கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தவகையில், ஒரு கிலோகிராம் சம்பா நெல் 41 ரூபாவிற்கும் ஒரு கிலோகிராம் நாட்டு நெல் 31 ரூபாவிற்கும் கொள்வனவு செய்யப்படுகின்ற நிலையில், அவற்றை விடக்குறைந்த விலைக்கு, தனியாரிடம் நெல்லை விற்ப​னை செய்ய வேண்டாம் என கஸ்தூரி அனுராதநாயக்க, விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ், சிங்கள புத்தாண்டு தினங்கள் மற்றும் ஞாயிறு தினங்கள் தவிர்ந்த ஏனைய தினங்களில் நெல் கொள்வனவு இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.