நுவரெலியாவில் பஸ் குடைசாய்ந்ததில் நேர்ந்த கதி

நுவரெலியாவில் பஸ் குடைசாய்ந்ததில் இருவர் பலி

by Fazlullah Mubarak 25-03-2019 | 7:54 AM

Colombo (News 1st) நுவரெலியா - வலப்பனை மாவு தோட்டத்தில் பஸ்ஸொன்று பள்ளத்தில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த 60 பேர் தொடர்ந்தும் வலப்பனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்றிரவு 7.15 மணியளவில் குறித்த பஸ் பள்ளத்தில் வீழந்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையே பஸ் விபத்துக்கு காரணம் எனக் கூறப்படுகின்றது. வலப்பனையிலிருந்து இராகலை நோக்கி குறித்த பஸ் பயணித்துள்ளது. அம்பாறையிலிருந்து சென்ற பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.