ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை இன்று

ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை இன்று

by Fazlullah Mubarak 25-03-2019 | 7:51 AM

Colombo (News 1st) கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகவுள்ளன.

இதன்படி, அரச மருந்தகங்கள் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் இன்று விசாரணைகள் நடைபெறவுள்ளன. சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலூடாக ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் திகதி கடந்த 19 ஆம் திகதியுடன் நிறைவடைந்ததுடன், குறித்த காலத்திற்குள் 1,142 முறைப்பாடுகள் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.