by Staff Writer 25-03-2019 | 3:53 PM
Colombo (News 1st) நாட்டின் பல பகுதிகளில் சாதாரண வெப்பநிலையை விட 2 முதல் 4 பாகை செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் குருநாகல் பகுதியில் அதிக வெப்பநிலையாக 37.5 பாகை செல்சியஸாகப் பதிவாகியுள்ளது.
வவுனியா, அநுராதபுரம், கட்டுகஸ்தொட்டை, மஹா இலுப்பள்ளம ஆகிய பகுதிகளில் பகல் வேளையில் சாதாரண வெப்பநிலையை விட 3 பாகை செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனைத்தவிர, யாழ்ப்பாணம், திருகோணமலை, பதுளை, இரத்மலானை ஆகிய பகுதிகளில் 2 பாகை செல்சியசினால் வெப்பநிலை அதிகரித்துள்ளது.
அநுராதபுரம், கொழும்பு, இரத்மலானை பகுதிகளில் இரவு வேளைகளில் 2 பாகை செல்சியசினால் வெப்பநிலை அதிகரித்துள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.