கொழும்பில் போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கை

கொழும்பில் போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கை - ஜனாதிபதி

by Staff Writer 25-03-2019 | 3:50 PM
Colombo (News 1st) கொழும்பு நகரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் எதிர்வரும் 3 ஆம் திகதி முதல் போதைப்பொருள் சுற்றிவளைப்புக்களை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்த சுற்றிவளைப்புக்களை முப்படை மற்றும் பொலிஸார் இணைந்து முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஹிங்குரங்கொட ஆனந்த பாலிக்கா வித்தியாலயத்தில் இன்று (25ஆம் திகதி) காலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.