கடுவளை - பியகம வீதி நாளை முதல் மூடப்படுகிறது

கடுவளை - பியகம வீதி நாளை முதல் மூடப்படுகிறது

by Staff Writer 25-03-2019 | 6:01 PM
Colombo (News 1st) கடுவளை முதல் பியகம வரையிலான வீதி நாளை (26ஆம் திகதி) முதல் எதிர்வரும் 29ஆம் திகதி வரை, இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை மூடப்படவுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடுவளை பாலத்தில் இடம்பெறும் அவசர திருத்தவேலை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதியில் மாற்றுவீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் வாகன சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர். இதேவேளை, மாற்றுவீதியாக அதிவேக வீதியின் மேம்பாலத்தை பயன்படுத்த முடியும் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.