ஈரானியர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர்

ஈரானியர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர்

by Fazlullah Mubarak 25-03-2019 | 7:56 AM

Colombo (News 1st) தெற்கு கடற்பரப்பில் ​ஹெரோயினுடன் கைப்பற்றப்பட்ட படகும் படகில் கைது செய்யப்பட்ட ஈரானிய பிரஜைகளும் இன்று கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இதன்போது சந்தேகநபர்களை 7 நாட்களுக்கு தடுத்துவைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றில் கோரவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள ஈரானிய பிரஜைகளிடம் விசாரணைகளை நடத்துவதற்கு ஈரானிய தூதுவராலயத்திடம் இருந்து மொழிபெயர்ப்பு உதவிகளைப் பெறுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட ஈரான் படகு நேற்று மாலை கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டது. குறித்த படகிலிருந்து 107 கிலோ 22 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.