இன்று முதல் மின் துண்டிப்பு - விபரம் இதோ

by Fazlullah Mubarak 25-03-2019 | 7:46 AM

Colombo (News 1st) இன்று முதல் நாளாந்தம் காலை மற்றும் மாலை வேளைகளில் சில மணித்தியாலங்கள் மின்சாரம் துண்டிக்கப்படும் என, இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, காலை 8.30 மணி முதல் 11.30 மணி வரை அல்லது முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையான காலப்பகுதியிலும் பிற்பகல் 2.30 மணியிலிருந்து மாலை 5.30 மணி வரையான 3 மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது. இரவு வேளையில் மாலை 6.30 மணியிலிருந்து 7.30 மணி வரையும் அல்லது 7.30 மணி முதல் 8.30 மணி வரை அல்லது 8.30 மணியிலிருந்து 9.30 மணி வரையிலான ஒரு மணித்தியாலம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது. நாட்டின் 50 கிரீட் உப மின் நிலையங்கள் செயற்படுத்தப்படுவதுடன், அந்த உப மின் நிலையங்களின் காலவரையறைக்கு ஏற்ப மின்சாரம் துண்டிக்கப்படும் என, இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.