மெக்ஸிகோவில் மத்திய அமெரிக்கர்கள் தடுத்துவைப்பு

மெக்ஸிகோவில் மத்திய அமெரிக்க புகலிடக் கோரிக்கையாளர்கள் தடுத்துவைப்பு

by Staff Writer 24-03-2019 | 1:23 PM
Colombo (News 1st) மெக்ஸிகோ பொலிஸாரால் மத்திய அமெரிக்காவின் புகலிட கோரிக்கையாளர்கள் 107 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். குவாத்தமாலாவைச் சேர்ந்த 51 பேரும் ஹொண்டூரஸைச் சேர்ந்த 47 பேரும் சல்வடோரைச் சேர்ந்த 9 பேரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவுக்குள் நுழைய முற்பட்டபோது, எல்லை நகரமான ரெய்னொசா நகரில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில், சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களின் பிரவேசம் தொடர்பில், அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோவுக்கு இடையில் பதற்றம் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.