மத்திய மாகாணத்தில் இஞ்சி செய்கை விஸ்தரிப்பு

மத்திய மாகாணத்தில் இஞ்சி செய்கையை விஸ்தரிக்க நடவடிக்கை

by Staff Writer 24-03-2019 | 12:44 PM
Colombo (News1 1st) மத்திய மாகாணத்தில் இஞ்சி செய்கையை விஸ்தரிப்பதற்கு மாகாண ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. மத்திய மாகாணத்தில் இஞ்சி செய்கையில் ஈடுபடும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன், இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதற்காகத் தெரிவுசெய்யப்படும் விவசாயிகளுக்கு விதை கிழங்குகளை வழங்கவுள்ளதாகவும் மாகாண ஏற்றுமதி விவசாய திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.