தலங்கம எரிபொருள் நிலையத்தில் கொள்ளை

தலங்கம எரிபொருள் நிலையத்தில் கொள்ளை

by Staff Writer 24-03-2019 | 7:52 AM
Colombo (News 1st) தலங்கம பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. நேற்றிரவு 7.30 மணியளவில் மோட்டார்சைக்கிளில் வந்த இருவர், எரிபொருள் நிலையத்திலிருந்த ஊழியர்களை அச்சுறுத்தி பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், எவ்வளவு பணம் கொள்ளையிடப்பட்டதென்பது குறித்து இதுவரை தெரியவரவில்லை. சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.