மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே எமது தீர்மானம்: அங்கஜன் இராமநாதன்

by Bella Dalima 23-03-2019 | 7:24 PM
Colombo (News 1st) ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தமிழர் ஒன்றிய மாநாடு இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், கிளிநொச்சி மற்றும் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர் . இந்நிகழ்வில் உரையாற்றிய ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, வௌிநாட்டு நீதிபதிகளைக் கொண்டு வந்து யாழப்பாணத்தில் வழக்கு நடத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும் நாட்டிற்குள்ளேயே பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார். இதேவேளை, இந்நிகழ்வில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் கொண்டு வருவதே தமது தீர்மானம் எனவும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்கள் முழுமையாக மைத்திரிபால சிறிசேனவிற்கு பின்னால் நிற்பதாகவும் குறிப்பிட்டார்.