நச்சுத்தன்மையற்ற காய்கறி சந்தை மற்றும் கண்காட்சி

நச்சுத்தன்மையற்ற தேசிய காய்கறி சந்தை மற்றும் கண்காட்சி நடைபெறவுள்ளது

by Staff Writer 23-03-2019 | 4:39 PM
Colombo (News 1st) நச்சுத்தன்மையற்ற தேசிய காய்கறி சந்தை மற்றும் கண்காட்சி எதிர்வரும் 30 ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஏப்ரல் முதலாம் திகதி வரை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த கண்காட்சி நடைபெறவுள்ளது. நச்சுத்தன்மையற்ற உணவுப்பொருள் உற்பத்தி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது. நாட்டில் சிறுநீரக நோயாளர்கள், நீரிழிவு நோயாளர்கள் மற்றும் புற்று நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதற்கு பாதுகாப்பற்ற, நச்சுத்தன்மை கொண்ட உணவுப் பொருட்களே காரணமாக அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.