மனைவி, மாமியாரை கொலை செய்தவர் கைது

திஸ்ஸமகாராமயில் மனைவி, மாமியாரை கொலை செய்தவர் கைது

by Bella Dalima 23-03-2019 | 4:06 PM
Colombo (News 1st) திஸ்ஸமகாராம - சந்துன்கமுவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்கள் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். நபரொருவரால் அவரது மனைவி மற்றும் மனைவியின் தாய் ஆகியோர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 25 வயதான கிராம உத்தியோகத்தரும் அவரின் 54 வயதான தாயுமே கொலை செய்யப்பட்டுள்ளனர். குடும்பத்தகராறு காரணமாக கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.