சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வௌியாகவுள்ளன

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வௌியாகவுள்ளன

by Staff Writer 23-03-2019 | 4:24 PM
Colombo (News 1st) கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரத்திற்குள் வௌியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பெறுபேறுகள் அடங்கிய அட்டவணையைத் தயாரிக்கும் நடவடிக்கைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி. பூஜித குறிப்பிட்டார். இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரணத் தரப் பரீட்சையில் 56,641 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.