by Staff Writer 22-03-2019 | 3:38 PM
Colombo (News 1st) மொனராகலை - ஹொரம்புவ பகுதியில் எரிந்த கெப் வண்டியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கெப் வண்டியில் இன்று அதிகாலையில் தீ பரவியதாகவும் அதில் பயணித்தவர் எரிந்து உயிரிழந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
மொனராகலை - ஹுலந்தாவ பகுதியை சேர்ந்த 50 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் மொனராகலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மொனராகலை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.