செயற்கை மழை செயற்றிட்டம் வெற்றியளித்துள்ளது

மவுசாகலை நீரேந்து பகுதியில் முன்னெடுக்கப்பட்ட செயற்கை மழை செயற்றிட்டம் வெற்றி

by Staff Writer 22-03-2019 | 6:19 PM
Colombo (News 1st) நாட்டில் முன்னெடுக்கப்பட்ட செயற்கை மழை செயற்றிட்டம் வெற்றியளித்துள்ளது. மவுசாகலை நீரேந்து பகுதியில் இந்த செயற்திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை விமானப்படையின் Y-12 ரக விமானத்தினூடாக மவுசாகலை நீர்த்தேக்கத்திற்கு 8000 அடி உயரத்திலுள்ள மேகங்களைப் பயன்படுத்தி செயற்கை மழை பொழியச்செய்யப்பட்டுள்ளது. மேகக்கூட்டத்தின் மீது இரசாயனங்களை வீசியதன் பின்னர் 45 நிமிடங்களுக்கு மழை பெய்ததாகவும் மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.