இம்முறை பச்சைமிளகாய் அறுவடை அதிகரிப்பு

நாட்டின் பல பகுதிகளில் பச்சைமிளகாய் அறுவடை அதிகரிப்பு

by Staff Writer 22-03-2019 | 7:10 PM
Colombo (News 1st) நாட்டின் பல பகுதிகளில் இம்முறை போகத்தில் பச்சைமிளகாய் அறுவடை அதிகரித்துள்ளதாக ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் இரண்டு வாரங்களில் அதிக தொகை பச்சைமிளகாய் சந்தைக்கு விநியோகிக்கப்படுமெனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. தற்போது பச்சைமிளகாய் ஒரு கிலோகிராம் 650 ரூபாவிலிருந்து 700 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக ஏற்றுமதி விவசாய திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.