Colombo (News 1st)
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெலியத்த பிரதேச சபையின் எதிர்க்கட்சி தலைவர் கபில அமரகோன் உயிரிழந்துள்ளார். கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த போது, கடந்த 20 ஆம் திகதி கபில அமரகோன் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.