1547 கிலோகிராம் பீடி சுற்றும் இலைகள் கைப்பற்றல்

தலைமன்னாரில் 1547 கிலோகிராம் பீடி சுற்றும் இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன

by Staff Writer 22-03-2019 | 3:59 PM
Colombo (News 1st) 1547 கிலோகிராம் பீடி சுற்றும் இலைகளுடன் மூன்று சந்தேகநபர்கள் தலைமன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமன்னார் கடற்பரப்பில் இன்று காலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, பீடி சுற்றும் இலைகளுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்தது. டிங்கி படகொன்றில் இந்தியாவிலிருந்து இவை கொண்டுவரப்பட்டுள்ளதாக கடற்படையினர் குறிப்பிட்டனர். 28, 30 மற்றும் 35 வயதான தலைமன்னார் - ஊருமலை பகுதியைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களையும், பீடி சுற்றும் இலைகளையும் யாழ்ப்பாணம் சுங்கத் திணைக்களத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தலைமன்னார் கடற்பரப்பில் கடந்த ஒரு சில நாட்களில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 2,787 கிலோ பீடி சுற்றும் இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய செய்திகள்