இரசாயனத் தொழிற்சாலையில் வெடிப்பு: 47 பேர் பலி

சீனாவில் இரசாயன தொழிற்சாலையில் வெடிப்பு: 47 பேர் பலி, 640 பேர் காயம்

by Bella Dalima 22-03-2019 | 4:44 PM
சீனாவில் இரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் 47 பேர் உயிரிழந்துள்ளதுடன், 640 பேர் காயமடைந்துள்ளனர். சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள யான்செங் எனும் இடத்தில் அமைந்துள்ள உரம் தயாரிக்கும் இரசாயன தொழிற்சாலையிலேயே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த 640 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 32 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன. 58 பேர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர். வெடிப்புச் சம்பவத்தின் போது பரவிய தீ காரணமாக கட்டடங்கள் சிலவற்றுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளன. நேற்றிரவு இந்த அனர்த்தம் இடம்பெற்ற போதும், இன்று அதிகாலை 3 மணியளவிலேயே தீ கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.