by Staff Writer 22-03-2019 | 3:46 PM
Colombo (News 1st) புத்தளம் - அருவக்காடு கழிவகற்றல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.
பிரதான தபால் நிலையத்திற்கு அருகில் இருந்து பேரணி ஆரம்பமாகியதையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதேச செயலகத்திற்குள் செல்வதற்கு முற்பட்ட சந்தர்ப்பத்தில் பொலிஸாரால் வீதித்தடை இடப்பட்டது.
இதேவேளை, தபால் நிலைய சுற்றுவட்டத்தில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தைக் கலைப்பதற்கும் பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.
புத்தளம் நகர் முழுவதும் ஆர்ப்பாட்டக்காரர் சூழ்ந்து அருவக்காடு கழிவகற்றல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.
நகரில் பலத்த பாதுகாப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், கலகத்தடுப்புப் பிரிவினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
புத்தளம் அருவக்காடு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.