இன்று முதல் சீரான மின் விநியோகம்

நுரைச்சோலையின் திருத்தப்பட்ட மின்பிறப்பாக்கி தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பு

by Staff Writer 20-03-2019 | 7:21 AM
Colombo (News 1st) நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின், திருத்தப்பட்ட இரண்டாவது மின்பிறப்பாக்கி, நேற்றிரவு தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று முதல் மின்சாரம் துண்டிக்கப்படமாட்டாது என மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஸன ஜயவர்தன தெரிவித்துள்ளார். நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின், இரண்டாவது மின்பிறப்பாக்கி, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நேற்று முன்தினம் முற்பகல் 11 மணியளவில் செயலிழந்தது. இதனால் 270 மெகாவோல்ட் மின்சாரம் தேசிய கட்டமைப்புடன் இணைக்கப்படவில்லை. இதன் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.