தலைமன்னார் - ஊருமலையில் 150 கிலோ கேரள கஞ்சா மீட்பு

by Staff Writer 20-03-2019 | 1:07 PM
Colombo (News 1st) தலைமன்னார் - ஊருமலை கடற்கரையோரத்திலிருந்து சுமார் 150 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. கரையோரப்பகுதியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த 5 மூடைகளை இன்று காலை சோதனையிட்டபோதே கேரள கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டதாக, கடற்படையினர் தெரிவித்துள்ளனர். குறித்த 5 மூடைகளிலும் பொதியிடப்பட்டவாறு கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன.