கேகாலையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி 

கேகாலையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி 

by Staff Writer 20-03-2019 | 3:40 PM
Colombo (News 1st) கேகாலை - கரண்டுபோன சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். கொழும்பு நோக்கி பயணித்த காரொன்றும் வேன் ஒன்றும் எதிர் திசையில் பயணித்த பஸ்ஸுடன் மோதி இன்று பகல் விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். காரில் பயணித்தவர்களே விபத்தில் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் பெம்முல்ல பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டனர். விபத்தில் காரில் பயணித்த மேலும் மூன்று பேரும் வேனில் பயணித்த ஒருவரும் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துடன் தொடர்புடைய இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.