காலவரையறை அடங்கிய திட்டத்தை செயற்படுத்துக

இலங்கையில் காலவரையறை அடங்கிய திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறு ஐ.நா பேரவையில் கோரிக்கை

by Staff Writer 20-03-2019 | 5:24 PM
Colombo (News 1st) இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயற்பாடுகள் தொடர்பில் காலவரையறை அடங்கிய திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடரின் போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல நாடுகள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளன. இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் தயாரித்த அறிக்கை ஜெனிவாவில் இன்று சமர்ப்பிக்கப்பட்டது. மனித உரிமைகள் ஆணையாளர் நாயகத்தால் இன்று பகல் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.