தொல்பொருள் அகழ்வு தொடர்பில் ஈச்சங்குளம் OIC, கான்ஸ்டபிள் கைது

by Staff Writer 19-03-2019 | 12:08 PM
Colombo (News 1st) வவுனியா - ஈச்சங்குளம், கல்மடுல்ல பகுதியில் தொல்பொருள் அகழ்வு தொடர்பில், ஈச்சங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்மடுல்ல பகுதியில் தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்டமை தொடர்பில் நேற்று முன்தினம் சந்தேகநபர்கள் ஐவர் கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில், அகழ்விற்கு உதவிபுரிந்தமை தொடர்பில் ஈச்சங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியான இன்ஸ்பெக்டர் சுகாஸ் குமார மற்றும் பொலிஸ் கான்ஸ்டபள் விசுல் நிலந்த ஆகியோர் வவுனியா தலைமையக பொலிஸாரால் இன்று (19ஆம் திகதி) கைது செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து, சந்தேகநபர்களான பொலிஸ் உத்தியோகத்தர்களை வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.