அருவக்காட்டில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டம்

by Staff Writer 19-03-2019 | 1:17 PM
Colombo (News 1st) புத்தளம் - அருவக்காடு பகுதியில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பு - காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அருவக்காடு கழிவகற்றல் திட்டத்தை உடனடியாக இடைநிறுத்துமாறு இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது. தமது கோரிக்கை அடங்கிய மகஜரை ஆர்ப்பாட்டகாரர்கள் ஜனாதிபதியின் செயலாளரிடம் கையளித்ததாக, நியூஸ்பெஸ்ட்டின் அலுவலக செய்தியாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஆர்ப்பாட்டம் காரணமாக காலி வீதியின் NSA சுற்றுவட்டம் தொடக்கம் செரமிக் சந்தி வரையான பகுதி மூடப்பட்டுள்ளது. இந்தப் பகுதியூடான போக்குவரத்து தற்காலிகமாக தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.