பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட 7 பேர் கைது

வர்த்தகர்கள் கொலை: பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் வனப்பாதுகாப்பு அதிகாரி கைது

by Staff Writer 18-03-2019 | 6:58 PM
Colombo (News 1st) ரத்கம பகுதியில் வர்த்தகர்கள் இருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் 7 பேர் மற்றும் வனப்பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். உப பொலிஸ் இன்ஸ்பெக்டர்கள் இருவர், பொலிஸ் சார்ஜன்கள் இருவர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபள் மூவர் என 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் தென் மாகாண குற்றத்தடுப்புப் பிரிவை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.