பொகவந்தலாவயில் மாணிக்கக் கல் அகழ்ந்த 07 பேர் கைது

பொகவந்தலாவயில் சட்ட விரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட 7 பேர் கைது

by Fazlullah Mubarak 18-03-2019 | 1:35 PM

பொகவந்தலாவ பகுதியில் சட்ட விரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  பொகவந்தலாவ கொடியாகல தோட்டம் பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐந்து பேர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொகவந்தலாவையை சேர்ந்தவ்களே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, பொகவந்தலாவ செல்வகந்த பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் 7 பேரும் இன்று ஹற்றன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

ஏனைய செய்திகள்