by Staff Writer 18-03-2019 | 3:04 PM
Colombo (News 1st) சட்டத்தரணி நாகாநந்த கொடிதுவக்கு, எதிர்வரும் 3 வருடங்கள் சட்டத்தரணியாக செயற்படுவதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக செயற்பட்ட விஜித் மல்கொடவை அவமதிப்புக்கு உள்ளாக்கியமை தொடர்பில் குற்றவாளியாக உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, உயர் நீதிமன்றம் இன்று (18ஆம் திகதி) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
பிரதம நீதியரசரான நளீன் பெரேரா, நீதியரசர்களான சிசிர டி ஆப்று மற்றும் பிரசன்ன ஜயவர்தன ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு பரீசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே சட்டத்தரணி நாகாநந்த கொடிதுவக்குவிற்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.