30 மில்லியன் பெறுமதியான தங்கத்துடன் ஒருவர் கைது

30 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்துடன் ஒருவர் கைது

by Staff Writer 17-03-2019 | 2:07 PM
Colombo (News 1st) சுமார் 30 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான 4 கிலோகிராம் தங்கத்தை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவந்த இலங்கை பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர், இன்று அதிகாலை சென்னையிலிருந்து நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக, பிரதி சுங்கப்பணிப்பாளர் விபுல மினுவன்பிட்டிய தெரிவித்துள்ளார். 49 வயதான குறித்த சந்தேகநபர் கொழும்பு - புதுக்கடை பகுதியை சேர்ந்தவராவார். இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 40 தங்க பிஸ்கெட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக பதில் சுங்க ஊடகப்பேச்சாளர் விபுல மினுவன்பிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்.