கேகாலையில் சிறு தேயிலைத்தோட்ட செய்கை அபிவிருத்தி

சிறு தேயிலைத்தோட்ட செய்கையை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

by Staff Writer 17-03-2019 | 2:13 PM
Colombo (News 1st) கேகாலை மாவட்டத்தில், சிறு தேயிலைத்தோட்ட செய்கையை அபிவிருத்தி செய்வதற்கு சிறு தேயிலைத்தோட்ட அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, மாவட்டத்தில் ஒரு இலட்சம் தேயிலை கன்றுகளை செய்கையிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகார சபை தெரிவித்துள்ளது. 94 ஹெக்டேயர் காணியில் புதிதாக தேயிலை செய்கை செய்யவுள்ளதுடன், ஏற்கனவே 102 ஹெக்டேயர் காணியில் தேயிலை செய்கை முன்னெடுக்கப்படுவதாக, சிறு தேயிலைத்தோட்ட அபிவிருத்தி அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.