பதுளையின் சில பகுதிகளில் 3.55 ரிக்டர் அளவில் நில அதிர்வு

by Staff Writer 16-03-2019 | 3:30 PM
Colombo (News 1st) பதுளையின் சில பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இன்று காலை 8.30 அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளது. 10 தொடக்கம் 15 செக்கன்ட்களுக்கு நில அதிர்வு பதிவாகியுள்ளது. 3.55 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. நில அதிர்வு காரணமாக எவ்வித சேதங்களும் இதுவரை பதிவாகவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக தரவுகள் சேகரிக்கப்படுவதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் குறிப்பிட்டது.