அரசியல் என்பது கொள்ளையடிப்பதற்கான அனுமதிப் பத்திரம்: அனுரகுமார திசாநாயக்க

by Bella Dalima 16-03-2019 | 8:53 PM
Colombo (News 1st) எமது நாட்டில் அரசியல் என்பது கொள்ளையடிப்பதற்கு வழங்கப்படும் அனுமதிப் பத்திரம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ரணிலின் கொள்ளைக்கு எதிராக மஹிந்தவை நாட்டு மக்கள் நியமிப்பது சரியா எனவும் அனுரகுமார திசாநாயக்க கேள்வி எழுப்பினார். குருநாகல் - தொடம்கஸ்லந்த தொகுதிக்கூட்டத்தில் நேற்று (15) பங்கேற்றிருந்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.